கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: சென்னையில் பரபரப்பு

சென்னையில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரசிடென்சி கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்கியதாக தெரிகிறது

இதற்கு பழிவாங்கும் வகையில் பிரசிடென்சி கல்லூரி மாணவர் நேரு என்பவரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டதாக தெரிகிறது

இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply