shadow

preity4803பிரபல மும்பை தொழிலதிபர் நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கூறிய நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிடம் வாக்குமூலம் வாங்க மும்பை போலீஸார் முயற்சித்தனர். ஆனால் அவர் வாக்குமூலம் கொடுக்காமல் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதால், இன்னும் மூன்று நாட்களில் மும்பை காவல்நிலையத்திற்கு நேரில் வந்து ஆஜராகி வாக்குமூலம் கொடுக்கும்படி ப்ரீத்தி ஜிந்தாவின் வழக்கறிஞருக்கு மும்பை போலீஸ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

ப்ரீத்தி ஜிந்தாவிடம் வாக்குமூலம் வாங்கிய பிறகுதான் இந்த புகார் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கையை தங்களால் எடுக்க முடியும் என மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மும்பை தொழிலதிபர் நெஸ் வாடியா, “ப்ரீத்தி ஜிந்தாவை தான் பாலியல் பலாத்காரம் எதுவும் செய்யவில்லை என்றும், அவருடைய சம்மதத்தின்பேரில்தான் அவருடன் கடந்த ஐந்து வருடங்களாக வாழ்ந்து வந்ததாகவும், திடீரென தொழிலில் ஏற்பட்ட முறிவு காரணமாக ,ப்ரீத்தி ஜிந்தா, அபாண்டமாக புகார் கூறுகிறார் என்றும், இந்த புகாரை சட்டப்படி சந்திப்பேன் என்றும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாலிவுட் பிரபலங்கள் சிலர் கருத்து கூறும்போது, “நெஸ் வாடியாவும், ப்ரீத்தி ஜிந்தாவும் காதலித்து வந்தது பாலிவுட் படவுலகிற்கே தெரியும். இருவரும் கணவன் மனைவி போல் ஒரே வீட்டில்தான் ஐந்து ஆண்டுகாலம் வாழ்ந்துவந்தார்கள். பின்னர் திடீரென கடந்த 2009ஆம் ஆண்டு அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இருப்பினும் தொழில்முறையில் மட்டும் இருவரும் பார்ட்னராக இருந்து வந்தனர். தற்போது இருவருக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை என்று தெரிவித்தனர்.

Leave a Reply