shadow

PZintaIPL_AFPகிங்ஸ் லெவன் பஞ்சாப் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களான ப்ரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா ஆகிய இருவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் புகார் கூறி வருவதால் அந்த அணியை ப்ரீத்தி ஜிந்தா விற்க முடிவு செய்துவிட்டதாகவும், அமெரிக்காவுக்கு சென்று அவர் செட்டிலாகப் போவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனால் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள ப்ரீத்தி ஜிந்தா, “பஞ்சாப் அணியின் எனது பங்குகளை விற்கப்போவதாக கூறுவது தவறு. பஞ்சாப் அணியை ஒருபோதும் விற்கமாட்டேன், மேலும் இந்தியாவை விட்டு அமெரிக்கா உள்பட எந்த நாட்டிற்கும் செல்ல மாட்டேன். பங்குகளை நான் விற்க முயற்சி செய்வதாக வந்துள்ள தகவல் வதந்திதான், இதை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் நெஸ் வாடியாவை தாதாக்களை வைத்து மிரட்டுவதாக கூறப்பட்ட புகாரையும் அவர் மறுத்துள்ளார். 

Leave a Reply