shadow

ரசிகர்களுக்கு நன்றிக்கடிதம் எழுதிய ‘பாகுபலி’ பிரபாஸ்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் முடிவடைவதை அடுத்து சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனக்கு ஒரு தேசிய அளவிலான அடையாளம் கொடுத்த ‘பாகுபலி’ படத்திற்கும், இயக்குனர் ராஜமெளலிக்கும், குறிப்பாக இந்த படத்தை பிரமாண்டமாக வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றி கூறி நடிகர் பிரபாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என் வாழ்வின் பொன்னான, மிக சிறந்த அந்த நாளின் நினைவுகளை ஆழமான நன்றியோடு நினைவு கூறுகிறேன். `பாகுபலி’ குழுவினர் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடனும், மிகப் பெரிய ஆர்வத்துடனும், ஒற்றுமையாக பணியாற்றிய அந்த நாட்களின் நினைவுகள் என்னை சிலிர்ப்போடு திரும்பிப் பார்க்க வைக்கின்றன. என்னை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் ரசிகர்களுக்கும், நான் இந்த வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து மகிழ்கிறேன். குறிப்பாக எஸ்.எஸ்.ராஜமௌலி சாருக்கும், `பாகுபலி’ குழுவினர் அனைவருக்கும் இந்த மாபெரும் வெற்றியை நன்றியோடு சமர்ப்பிக்கிறேன்’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply