பிரபாகரனுக்கு பிரபல வங்கி செலுத்திய மரியாதை
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கை ராணுவத்திற்கு எதிராக நடந்த இறுதிப்போரில் மரணம் அடைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் அவரது புகைப்படத்தை பிரபல வங்கி ஒன்று தங்களது டெபிட் கார்டில் அச்சடித்து தர ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை பிரபாகரனுக்கு அந்த வங்கி செலுத்தும் மரியாதையாக கருதப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பார்க்ளேஸ் என்னும் சமீபத்தில் ஒரு அறிவிப்பை செய்துள்ளது. இதன்படி தங்கள் வங்கியில் நீண்ட நாட்கள் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் விரும்பினால் தங்கள் டெபிட் கார்டில் பிரபாகரனின் புகைப்படத்தை அச்சடித்து தரவுள்ளதாகவும் விருப்பம் உள்ளவர்கள் வங்கியின் கிளைகளை அணுகலாம் என்றும் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து உலகம் முழுவதிலும் உள்ள இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் பிரபாகரனின் புகைப்படத்தை தங்கள் டெபிட் கார்டில் அச்சடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.