லத்திகா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான பவர்ஸ்டார் சீனிவாசன், அந்த படத்தை கூட்டமே இல்லையென்றாலும் 300 நாட்களுக்கும் மேல் ஒரே தியேட்டரில் ஓட்டி சாதனை செய்தார். அதன்பின்னர் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தில் சந்தானத்துடன் நடித்த பவர்ஸ்டாருக்கு ஷங்கர் இயக்கிய ‘ஐ’ உள்பட பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
காமெடி வேடங்களில் நடித்து காமெடியாக வசனம் பேசி வந்த பவர்ஸ்டாருக்கு டுவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் ஏராளமான நண்பர்கள் உள்ளனர். அவருடைய டுவிட்டரை சுமார் 4 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் டுவிட்டரில் சிம்பு, சூர்யா ஆகியோர்களை கேலி செய்ததாக கூறப்படுகிறது.
சிம்பு தான் நடித்த ‘வாலு’ படத்தை பல ஆண்டுகளாக ரிலீஸ் செய்யாமல் திணறி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் ‘சிம்பு வாலு என்ற பெயருக்கு பதிலாக ‘தல’ என்று பெயர் வைத்திருந்தால் படம் ரிலீஸாகி சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் என்று கூறியுள்ளார்.
அதேபோல சமீபத்தில் டுவிட்டரில் இணைந்த சூர்யாவை வரவேற்ற பவர்ஸ்டார், ஆனால் சூர்யாவை டுவிட்டரில் பின் தொடரும் எண்ணம் இல்லை என்று கலாய்த்துள்ளார்.
பவர்ஸ்டாரின் கலாய்ப்பு தொடர்ந்து கொண்டே வருவதால் அவர் மீது சிம்புவும் சூர்யாவும் கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.