கொரோனா நேரத்தில் தபால் ஊழியர்கள் செய்த சாதனை

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தனியார் கொரியர் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த கொரோனா நேரத்தில் மருந்து மாத்திரைகளை சப்ளை செய்ய தபால் நிலையம் ஒன்றே வழியாக உள்ளது

நாடு முழுவதிலும் உள்ள தபால் ஊழியர்கள் கடந்த சில நாட்களில் 100 டன் மருந்து மாத்திரைகளை டெலிவரி செய்துள்ளனர்.

மெடிக்கல் ஸ்டோர்ஸ் மற்றும் மருத்துவமனைகளுக்கு மருந்துகளை டெலிவரி செய்வது தற்போதைய நிலையில் தபால் ஊழியர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்களை பாராட்டுவது போல் தபால் ஊழியர்களையும் பாராட்டுவோமே

Leave a Reply