சசிகலா புஷ்பா விவகாரத்தில் கடைசியாக விழுந்த விக்கெட் இதுதான்
சமீபத்தில் சசிகலா புஷ்பாவால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதிமுகவின் முக்கிய தலைகள் உருண்ட நிலையில் ஜெயலலிதாவுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய ஒருவருடைய தலையும் உருண்டுள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது.
போயஸ் கார்டனில் அதிகார அதிகாரியாக வலம் வந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பதவி பறிக்கப்பட்டுவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் அதிர்ச்சியுடன் கூறுகின்றன. பூங்குன்றனை ஜெயலலிதா விடுமுறை எடுத்து கொண்டு போக சொல்லிவிட்டதாகவும் அவருக்கு பதில் அந்த பதவியில் கார்த்திகேயன் பொறுப்பு ஏற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவிடம் நேரடியாகப் பேசக் கூடிய வல்லமை படைத்த இவர். கார்டனுக்கு வரும் புகார்களை ஜெயலலிதா கவனத்துக்கு ஒழுங்காக கொண்டு சேர்க்கும் பணியை செய்யவில்லை என்றும், மேலும் இவர் கடந்த சில மாதங்களாக மாவட்டச் செயலாளர்கள் மீதான புகார்களை முறையாக தலைமையிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை என்றும், சசிகலா புஷ்பா விவகாரத்தில் பூங்குன்றனும் சம்பந்தப்பட்டிருப்பதாக ஜெயலலிதாவுக்கு சந்தேகம் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இவருடைய தலையும் உருண்டுள்ளதாக அதிமுகவில் பலமான செய்திகள் உலா வருகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.