இந்த ஆண்டு பொங்கல் பரிசு எவ்வளவு? முதல்வர் அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசாக தமிழகத்தில் உள்ள அரிசி அட்டை வைத்திருக்கும் அனைத்து பொது மக்களுக்கும் ரொக்கம் மற்றும் பால் தயாரிக்க அரிசி சர்க்கரை உள்பட்ட பொருள்கள் வழங்கப்படும் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இந்த ஆண்டு அரிசி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்
அதுமட்டுமின்றி பொங்கல் வைப்பதற்காக ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை ஆகியவையும் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக அதிக தொகை வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட அதே ரூபாய் ஆயிரம் மட்டுமே இந்த ஆண்டும் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.