சமீபத்தில் மத்திய அரசில் 21 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். இதனால் ஏற்கனவே உள்ள ஒருசில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டன. இதில் தமிழகத்தின் ஒரே அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இலாகா மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணனுக்கு, தேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பொன். ராதாகிருஷ்ணன் வகித்து வந்த பதவி ஜித்தேஸ்வராவுக்கு வழங்கப்பட்டது.
புதிய இலாகாவை பொறுப்பேற்றுக்கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மூலம் தமிழகத்தின் முன்னேற்றத்திற்குக் கூடுதல் கவனம் செலுத்திப் பாடுபடுவேன். அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வேன். அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்ற போது நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மூலம் பல பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய அரசும் பல்வேறு மகத்துவமிக்க சாதனைகளை செயல்படுத்தும்
Leave a Reply
You must be logged in to post a comment.