shadow

ஜல்லிக்கட்டு பிரச்சனை. மன்னிப்பு கேட்டார் பொன்.ராதாகிருஷ்ணன்

கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மூர் அரசியல்வாதிகள் இந்த ஆண்டு நிச்சயம் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று நம்பிக்கை கூறுவதும் பின்னர் அது முடியாமல் போகவே மன்னிப்பு கோருவதும் வழக்கமாகி வருகிறது.

இதேபோல் இந்த ஆண்டும் நேற்று வரை இந்த ஆண்டு நிச்சயம் ஜல்லிக்கட்டு நடக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் கூறி வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தற்போது தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதே மன்னிப்பை இனிவரும் காலங்களில் அவர் கேட்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டுமானால் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஆக்கபூர்வமான போராட்டங்களில் ஈடுபட வேண்டும். மத்திய, மாநில அரசுகளால் நீதி கிடைக்க வழியில்லை. எனவே பீட்டாவை எதிர்த்து அனைத்து தமிழர்களும் குரல் கொடுப்போம் என இந்த பொங்கல் திருநாளில் சபதம் ஏற்போம்

Leave a Reply