shadow

ஊழல் தொடங்குவதே கமலின் திரையுலகில் இருந்துதான்! பொள்ளாச்சி ஜெயராமன்

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே அனல் பறக்கும் அரசியல் கருத்துக்களை கூறி வரும் நிலையில் அமைச்சர்களும் சளைக்காமல் கமலுக்கு பதில் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் இதுகுறித்து கூறியபோது, ‘ திரைப் பட நடிகர்கள் அரசியலுக்கு வரலாம் அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது. ஆனால் அதற்கு முன் அவர்கள் மக்களுக்கு செய்த சேவை என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும். தான் ஒரு அரசியல்வாதி என கூறும் கமல், தமிழகத்தில் பல்வேறு குற்றச்சம்பங்கள் நடந்தபோது என்ன செய்து கொண்டு இருந்தார். யாரையோ முன்னிலைப்படுத்த கமல் முயற்சிக்கிறார்.

ஊழலைப் பற்றி பேசும் கமல், வெளிப்படையான ஊழல் தொடங்குவதே திரையரங்கு கட்டண விற்பனையில்தான். திரையரங்குக்கு வெளியில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதை அறிவாரா? கமல்ஹாசன் நடித்த புதிய படம் வெளியாகும்போது, டிக்கெட் விலை, அரசு நிர்ணயித்த விலைக்கே விற்கப்படும் என அறிவிக்க கமல் தயாராக உள்ளாரா? அவ்வாறு அவர் அறிவித்தால் கமலின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறோம். இனிமேல் திரையரங்குகளில் அதிக விலைக்கு டிக்கெட்கள் விற்கப்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இது திரை உலகத்தினருக்கான மிரட்டலா என்ற கேள்விக்கு, ‘இது மிரட்டல் கிடையாது. ஊழல் நடப்பதாகக் கூறியுள்ளார். ஊழல் எங்கு தொடங்குகிறது என்பதை தெரிவித்துள்ளேன்’

Leave a Reply