கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டவர் திடீர் மரணம்: விபத்தா? கொலையா?
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நடைபெற்ற விசாரணையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் என்பவர்தான் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடிக்க திட்டம் போட்டு கூலிப்படைகளை ஏவியதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கனகராஜை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கும் நிலையில் போலீசார் தன்னை நெருங்கிவிட்டதை அறிந்து கொண்ட கனகராஜ் சேலம் போலீசில் சரண் அடைய முடிவு செய்தார். சரண் அடைவதற்காக அவர் காவல்நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்
கனகராஜ் மரணம் உண்மையிலேயே விபத்தா? அல்லது அவர் சரண் அடைவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு மர்ம நபர்கள் யாராவது விபத்தை ஏற்படுத்தினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.