shadow

சீருடையில் காவல்துறை அதிகாரி பேட்டி கொடுக்கலாமா? ஸ்டாலின் கேள்விக்கு பதில்

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சென்னை மயிலாப்பூர் காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் சீருடையில் எப்படி பேட்டி கொடுக்கலாம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதுகுறித்து பதிலளித்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘மு.க.ஸ்டாலின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என உறுதி அளித்தார்

மேலும் இதுகுறித்த விவாதம் ஒன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்தது. அப்போது பேசிய முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர், ‘ஊடகங்களை காவல்துறை அதிகாரி சந்திக்கக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. அதுமட்டுமின்றி  மயிலாப்பூர் காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் அவராகவே ஊடகத்தின் அலுவலக்த்திற்கு சென்று பேட்டி கொடுக்கவில்லை. அவருடைய அலுவலகத்தில் ஊடகத்தினர்தான் சென்று பேட்டி எடுத்துள்ளனர். எனவே இது எந்த வகையிலும் சட்டமீறல் கிடையாது’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply