கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு: மரணம் அடைந்த கனகராஜின் மனைவியிடம் விசாரணை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரபபி ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொடநாடு பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் கனகராஜ் என்ற ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கடந்த வாரம் ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த இனோவா கார் மோதி உயிரிழந்தார்.
இந்த நிலையில், தற்போது கனகராஜின் மனைவி கலைவாணி மற்றும் கலைவாணியின் சகோதரர் தனபால் ஆகியோர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்டத்தை நோக்கி விசாரணை தொடரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.