shadow

காவல்துறைதான் எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும்: தமிழிசை

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது முகநூலில் பதிவு செய்த நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தமிழக காவல்துறை இன்னும் அவரை கைது செய்யாதது குறித்து அரசியல் தலைவர்கள் கேள்விமேல் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக் தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ‘எஸ்.வி சேகரை கைது செய்ய காவல்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைதான் அவர் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரை செய்துவிட்டோம். எங்கள் சார்பில் ஏற்கனவே அவர் மீது நடவடிக்கை எடுத்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சருடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்று திமுக உள்பட அரசியல் கட்சிகள் காவல்துறையினர்களை கேள்வி எழுப்பி கொண்டிருக்கும் நிலையில் தமிழிசை இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply