டெல்லி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் யார்? பரபரப்பு தகவல்
டெல்லியில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்ட்டரில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அந்த இருவர் யார் என்பது குறித்தும் போலீசார் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது
ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் ஆகிய இருவர் கடந்த சில வருடங்களாக பல்வேறு வழக்குகளில் சிக்கி போலீசாரிடம் இருந்து தப்பி மறைந்து வாழ்ந்து வந்ததாகவும் இதனை அடுத்து இன்று அதிகாலை அவர்கள் இருக்கும் இடம் குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் ஆனால் வேறு வழியில்லாமல் என்கவுண்டர் செய்து அவர்கள் இருவரையும் சுட்டுக்கொள்ள சுட்டுக் கொன்றதாகவும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
இந்த என்கவுண்டரால் டெல்லியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஐதராபாத்தில் பெண் டாக்டரை கொலை செய்த நால்வர் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.