3 ஸ்டார் ஓட்டலில் விபச்சாரம்: நடிகை-பாடகி உள்பட மூன்று பெண்கள் மீட்பு

மும்பையில் 3 ஸ்டார் ஓட்டல் ஒன்றில் நடந்த விபச்சாரத்தில் நடிகையும் பாடகியுமான இளம்பெண் உள்பட மூன்று பேர்களை போலீசார் மீட்டனர்.

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஒரு 3 ஸ்டார் ஓட்டலில் விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அந்த ஓட்டலில் அதிரடி ரெய்டு செய்தனர். அப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மூன்று பெண்களை மீட்டு, அவர்களை விபச்சாரத்தில் தள்ளிய ப்ரியா ஷர்மா என்ற பெண்ணை கைது செய்தனர்.

டிராவல் ஏஜென்ஸி நடத்தி வரும் ப்ரியாஷர்மா, விபச்சாரம் உள்ளிட்ட பல சமூக குற்றங்களை செய்து வருவது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர் மைனர் பெண் என்றும், ஒருவர் நடிகையும் பாடகியும் என்றும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply