அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அரசு
மத்திய பிரதேச மாநிலத்தில் போதையில் இருந்த ஒருவரை போலீஸ்காரர்கள் இருவர் கண்மூடித்தனமாக லத்தியால் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனை அடுத்து அந்த இருவரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
மத்திய பிரதேச மாநிலத்தில் சிந்துவாரா என்ற பகுதியில் சாலையில் போதையில் ஒருவர் நடமாடியதாக தெரிகிறது இதனையடுத்து அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள் இருவர் போதையில் இருந்த நபரை கடுமையாக மாற்றி மாற்றி லத்தியால் தாக்கி அதன் பின்னர் அவரை தூக்கி போலீஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்றனர்
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனை அடுத்து மத்திய பிரதேச மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் அந்த இரண்டு போலீசார் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.