shadow

சசிகலாவிடம் இருந்து போயஸ் தோட்ட இல்லம் மீட்கப்படும். ஓபிஎஸ்

தமிழக அரசியல் இதுபோன்ற ஒரு பரபரப்பை கடந்த பல ஆண்டுகளாக பார்த்ததில்லை. ஆட்சி அமைக்க சசிகலாவும், ஓபிஎஸ் அவர்களும் நடத்தி வரும் போரில் வெற்றி பெறுபவர்கள் யார்? என்ற கிளைமாக்ஸை அறிய கோடிக்கணக்கான தமிழக மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா வந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை சசிகலாவிடம் இருந்து கைப்பற்றி ‘அம்மாவின் நினைவு இல்லம்’ ஆக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் ஓபிஎஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக மாற்றப்படும் வரை எங்களுடைய அறப்போராட்டம் ஓயாது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply