கறுப்பு என்றால் என்ன என்பது மோடிக்கு புரிந்திருக்கும்: வைரமுத்து
நேற்று தமிழகம் வந்த பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தின் மூலம் கறுப்பு என்பது சர்வதேச மொழி, என்பது பிரதமர் மோடிக்கு புரிந்திருக்கும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறியிருப்பதாவது, “கறுப்பு என்பது சர்வதேச மொழி. இந்தியப் பிரதமருக்குப் புரிந்திருக்கும். காவிரி மேலாண்மை வாரியத்தைக் கட்டி எழுப்புங்கள். அது கர்நாடகத்துக்கு அநீதி அல்ல; தமிழ்நாட்டுக்கு நீதி” என அவர் பதிவு செய்துள்ளார்.
//twitter.com/vairamuthu/status/983986011255558146
Leave a Reply
You must be logged in to post a comment.