இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு அவசர ஆலோசனை செய்ய உள்ளார்.

அவருடன் பல்வேறு அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளும் ஆலோசனை உள்ளதாகவும் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி தொடர்பாக இந்த கூட்டத்தில் அதிரடி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு உள்பட ஒருசில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் பிரதமரின் அவசர ஆலோசனைக்கு பின்னர் வெளிவரும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்

Leave a Reply