வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தமிழர்கள்

தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகள் என பிரதமர் நரேந்திர மோடி தமிழில் டுவிட் செய்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்

இன்று தமிழ்ப்புத்தாண்டு உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழர்களுக்கு தமிழில் டுவிட் போட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டில் கூறியதாவதூ:

என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன் .எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் இந்த டுவிட்டுக்கு பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply