shadow

நவம்பர் 8ஆம் தேதியை அடுத்து நாளை பிரதமர் மோடி டிவியில் உரை

கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அதிரடி அறிவிப்பை பாரத பிரதமர் நரேந்திரமோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்த நிலையில் மீண்டும் நாளை தொலைக்காட்சியில் பேசுகிறார்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்பு முடிந்து 50 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் டிசம்பர் 31ஆம் தேதி பிரதமர் உரையாற்ற உள்ளதால் இந்த உரையினை கேட்க இந்தியார்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும் காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், இதுகுறித்து கால நீட்டிப்பு வழங்கப்படுமா? அல்லது வேறு சலுகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுமா? என்பது குறித்த தகவல்கள் பிரதமரின் உரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply