shadow

மாட்டிறைச்சி கொலை விவகாரத்தில் மெளனம் கலைத்த பிரதமர்
modi
கர்நாடகா மாநில பிரபல எழுத்தாளர் கார்கி கொலை செய்யப்பட்டது, உ.பியில்  மாட்டிறைச்சி வைத்திருந்தாக இக்லாக் என்பவர் கொலை செய்யப்பட்டது போன்ற விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காமல் மெளனமாக இருப்பது குறித்து கருணாநிதி உள்பட பல அரசியல் கட்சி பிரமுகர்கள் பிரதமருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் முதல்முறையாக இதுகுறித்து பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி கூறியதாவது, “மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முதியவர் இக்லாக் கொல்லப்பட்ட சம்பவமும் மும்பையில் பாகிஸ்தான் பாடகர் குலாம் நபியின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதும் துரதிருஷ்டவசமானவை.  ஏற்றுக்கொள்ளக் கூடியதே அல்ல. அதேவேளையில் இந்த விவகாரங்களில் மத்திய அரசின் பங்களிப்புக்கு என்ன வேலை இருக்கிறது? ” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அமைச்சர்களும், பாஜகவின் முன்னணி தலைவர்களும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே பிரதமர் தனது மெளனத்தை கலைத்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply