shadow

கார்த்திக் சிதம்பரம் கைதை கண்டித்து திருச்சியில் பிரதமர் உருவப்படம் எரிப்பு

நேற்று சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரதமர் மோடியின் உருவப்படத்தையும் அவர்கள் எரித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

கார்த்திக் சிதம்பரம் கைது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எனக் குற்றஞ்சாட்டி, திருச்சி முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.சி.பாபு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான ஜி.எம்.ஜி.மகேந்திரன், பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை கிழித்தும்,அந்தப் படத்தைத் தீயிட்டு எரித்தார். அப்போது போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

Leave a Reply