தமிழகம் வரும் பிரதமர் மோடி: மிண்டும் கருப்புக்கொடி காட்டப்படுமா?
கடந்த முறை தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு திமுக உள்பட பல்வேறு கட்சியினர் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டிய நிலையில் மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் விரைவில் வரவுள்ளார். இந்த நிலையில் மீண்டும் பிரதமருக்கு எதிர்க்கட்சியினர் கருப்புக்கொடி காட்டுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது
மதுரை அருகில் உள்ள தோப்பூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) அமைய உள்ளது. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மிகுந்த பயன் பெறும் என்று கூறப்படும் நிலையில் இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவிழா விரைவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மதுரை வரும்போது மீண்டும் அவருக்கு கருப்புக்கொடி காட்ட எதிர்க்கட்சிகள் முயற்சி செய்யும் என்று கூறப்படுவதால் பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என தெரிகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.