shadow

104 வயது பெண்ணின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி. ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளை என்ற பெண்ணின் காலில் அப்போதைய பிரதமர் விழுந்து வணங்கிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு விழாவில் பிரதமர் மோடி, 104 வயது பெண் ஒருவரின் காலில் விழுந்து வணங்கியுள்ளார்.

பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாகிய தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. ராயப்பூரில் நடந்த இந்த பாராட்டு விழாவில் 104 வயது குன்வர் பாய் என்பவர் பரிசு பெற வந்திருந்தார்

தன்னிடம் உள்ள ஆடுகளை விற்று அந்த பணத்தில் கழிவறை கட்டியதால் அவருக்கு பாராட்டு வழங்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக இந்த வயதிலும் செயலாற்றி குன்வர் அவர்களை பிரதமர் மோடி பாராட்டியதோடு அவருடைய காலில் விழுந்தும் வணங்கினார். பிரதமரின் இந்த எதிர்பாராத செய்மை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Leave a Reply