95 வயது தாயாரை சந்திக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த பிரதமர் மோடி
பாரத பிரதமர் நரேந்திரமோடி தனது பிசியான பணிகளிலும் அவ்வப்போது தாயாரை சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி தனது பிறந்த நாளில் தாயாரை சந்தித்த மோடி, நேற்று திடீரென ஹெலிகாப்டரில் சென்று அண்ணன் வீட்டில் தங்கியிருந்த தாயார் ஹிராபென்னை சந்தித்தார்.
இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடந்ததாகவும், பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றுவிட்டு பாஜக தலைமையத்தில் நடைப்பெற்ற பொதுக்க்கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் தலைநகர் காந்திநகரில் நடைப்பெற்ற இந்த பாஜக கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், குறிப்பாக ரூபாய் பிரச்சனையால் தவித்து கொண்டிருக்கும் பொதுமக்களை சமாளிப்பது எப்படி? என்பது குறித்து ஆலோசனை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.