தமிழக அரசு அறிவிப்பு

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் ஜூலை 27ஆம் தேதி கொரோனா வைரஸ் பயம் காரணமாக ஒருசில மாணவர்களுக்காக நடத்தப்படும் மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு எப்போது ரிசல்ட் என்ற தகவல் குறித்த செய்திக்குறிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

24.03.2020 அன்று நடைபெற்ற மார்ச்‌ 2020, மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வுகளான வேதியியல்‌, கணக்குப்பதிவியல்‌ மற்றும்‌ புவியியல்‌ (புதிய பாடத்திட்டம்‌ மற்றும்‌ பழைய பாடத்திட்டம்‌) பாடத்‌ தேர்வுகளை எழுத முடியாத தேர்வர்களுக்கு, அவர்கள்‌ தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள்‌ மட்டும்‌ தற்போது வெளியிடப்படும்‌. 27.07.2020 அன்று நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு மறு தேர்வினை எழுதும்‌ தேர்வர்களுக்கு மட்டும்‌, மறுதேர்வு முடிவடைந்த பின்‌, தேர்வெழுதிய அனைத்து பாடங்களுக்குமான தேர்வு முடிவுகள்‌ வெளியிடப்படும்‌.

Leave a Reply