shadow

அடுத்த ஆண்டு முதல் 11ஆம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு. தமிழக அரசு அதிரடி

பெரும்பாலான கல்வி நிலையங்களில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பின் பாடங்களே நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் அடுத்த கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் பள்ளிகளில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும், புதிய கல்வித்திட்டத்தில் யோகா மற்றும் உடற்பயிற்சிகள் பாடங்கள் புதியதாக சேர்க்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி பள்ளியில் உள்ள நூலகங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கான நூல்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இதற்காக மாவட்ட நூலகங்களுக்கு 2.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply