திருச்சானூர் கோயிலில் நவம்பர் 19-இல் கார்த்திகை பிரம்மோத்ஸவம் தொடக்கம்
திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, கார்த்திகை மாத பிரம்மோத்ஸவம், நவம்பர் 19-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையானின் பட்டத்துராணியான திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, ஆண்டுதோறும், கார்த்திகை மாத வருடாந்திர பிரம்மோத்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் 19-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தாயாருக்கு விமரிசையாக பிரம்மோத்ஸவம் நடைபெற உள்ளது.
இதற்காக செவ்வாய்க்கிழமை காலை கோயில் முழுவதும் தூய்மைபடுத்தும் வகையில், கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தை கோயில் நிர்வாகம் நடத்தியது. இதையொட்டி, காலை முதல் மதியம் வரை கோயில் நடை சாத்தப்பட்டது. பின்னர், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டு, மஞ்சள், குங்குமம், கோரோஜனம், கிச்சிலி கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் அனைத்தும் கலந்த, வாசனை திரவியத்தை கோயில் சுவற்றில் பூசி, கோயில் முழுவதையும் சுத்தம் செய்தனர்.
பிரம்மோற்சவ அட்டவணை
தேதி காலை மாலை/ இரவு
18-11-14 முளைவிடுதல் விழா
19-11-14 கொடி ஏற்றம் சின்னசேஷ வாகனம்
20-11-14 பெரியசேஷ வாகனம் அன்னபறவை வாகனம்
21-11-14 முத்துப்பந்தல் சிம்ம வாகனம்
22-11-14 கல்பவிருட்ச வாகனம் அனுமந்த வாகனம்
23-11-14 தந்த பல்லக்கு வசந்தோற்சவம் / யானை வாகனம்
24-11-14 ஸர்வபூபால வாகனம் தங்கத்தேர் / கருடவாகனம்
25-11-14 சூர்யபிரபை சந்திர பிரபை
26-11-14 ரத உற்சவம் குதிரை வாகனம்
27-11-14 பஞ்சமி தீர்த்தம் கொடியிறக்கம்
Leave a Reply
You must be logged in to post a comment.