shadow

குவைத் நாட்டிற்கு வேலைக்கு செல்ல தடை: பிலிப்பைன்ஸ் அதிரடி உத்தரவு

குவைத் நாட்டில் தனது நாட்டு தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக புகார்கள் அதிகள் வந்து கொண்டிருப்பதால் பிலிப்பைன்ஸ், அந்நாட்டுக்கு வேலைக்குச் செல்ல தனது குடிமக்களுக்கு தடை விதித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து மட்டும் 23 லட்சம் தொழிலாளர்கள் குவைத் உள்பட வெளிநாடுகளில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக குவைத் நாட்டில் மட்டும் சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு வேலையில் இருக்கும் பிலிப்பைன்ஸ் மக்கள் குறிப்பாக பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதாக புகார்கள் குவிந்தன.

இது போன்ற புகார்கள் அதிகளவில் எழுந்துள்ளதை அடுத்து குவைத்துக்கு வேலைக்காக செல்ல தனது குடிமக்களுக்கு தற்காலிக தடை விதித்து பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ உத்தரவிட்டுள்ளார். பாலியல் துன்புறுத்தல் குறித்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply