பிலிப்பைன்ஸ் நாட்டில் டெம்பின் புயல்: 200 பேர் பலி
பிலிப்பைனஸ் நாட்டில் ஏற்பட்ட டெம்பின் புயல் பாதிப்பால், 200 க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் மின்டானவ் மாகாணத்தில் டெம்பின் புயல் 80 கிமீ வேகத்தில் கரையை கடந்தது. இந்த புயல் அங்குள்ள டுபோத், பியாகபோ ஆகிய இரண்டு நகரங்களையும் கடுமையாக தாக்கியது. இதன் காரணமாக அங்கிருந்த வீடுகள் பலவும் இருந்த இடம் தெரியாமல் போனது.
இந்த டெம்பின் புயலின் ருத்ர தாண்டவத்தால், பிலிப்பைன்ஸ் நாட்டில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரழந்துள்ளதாகவும், 160க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெயிட்டுள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.