shadow

கடந்த சில நாட்களாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடும் அவதி உள்ளனர் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105.74 எனவும், இன்று ஒரே நாளில் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் ரூ.101.92 என்ற விலைக்கும் விற்பனையாகிறது.