shadow

வேலூர் சிறையில் சக கைதியால் தாக்கப்பட்ட பேரறிவாளன். பெரும் பரபரப்பு

periyavalanராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் தண்டனையில் இருக்கும் பேரறிவாளனை சக கைதி ஒருவர் திடீரென தாக்கியதால் வேலூர் சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ள்து. இந்த தாக்குதலில் பேரறிவாளன் கையில் காயம் ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு தையல் போடப்பட்டிருப்பதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை பேரறிவாளன் தனது வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபொது சக கைதிகளில் ஒருவரான ராஜேஷ் கண்ணா என்பவர் இரும்பு கம்பியால் அடித்ததாக கூறப்படுகிறது.

ஆள் கடத்தல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்ற ராஜேஷ்கண்ணா பேரறிவாளனை ஏன் தாக்கினார்? இருவருக்குமிடையே என்ன பிரச்சனை என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேலூர் சிறைக்கு விரைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் சிறை அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘ராஜேஷ் தாக்கியதில் பேரறிவாளனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பேரறிவாளன் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் ராஜேஷ்க்கு எந்த காயமும் இல்லை. இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்.” என்று கூறினார்.

Leave a Reply