shadow

110f032c-6d33-4270-a144-f1a93d4094a2_S_secvpf

பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள அழகு நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பெடிக்யூர் சிறந்த வழி. இதைச் செய்ய அழகு நிலையங்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே இவற்றை எளிமையாக செய்யலாம். இங்கு வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதை வாரம் ஒருமுறை பின்பற்றி வந்தாலே போதும், குதிகால் வெடிப்பு வருவதைத் தடுக்கலாம்.

பெடிக்யூர் செய்ய தேவைப்படும் பொருட்கள்..
* நெயில் பாலிஷ் ரிமூவர், காட்டன்
* ஒரு வாளி, வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை, ஷாம்பு, கல் உப்பு
* நெயில் கட்டர், மெருகேற்ற உதவும் கல் அல்லது பிரஷ் அல்லது நார்
* மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெய்

முதலில் கால் விரல் நகங்களில் உள்ள நெயில் பாலிஷை ரிமூவர் கொண்டு நீக்க வேண்டும். பின் ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் கல் உப்பு, சிறிது ஷாம்பு மற்றும் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அந்நீரில் கால்களை 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு மெருகேற்ற உதவும் கல் அல்லது பிரஷ் அல்லது நார் கொண்டு பாதங்கள் மென்மையாக தேய்த்து விட வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் விரைவில் வெளியேறிவிடும்.

அடுத்து நெயில் கட்டர் கொண்டு கால் விரலில் உள்ள நகங்களை வெட்டி நீக்கி விட்டு, நகங்களின் முனைகளை தேய்த்து விடுங்கள். இதனால் கால்விரல் நகங்கள் சீராகக் காணப்படும். இறுதியில் கால்களை ஒருமுறை நீரில் கழுவி, பின் துணியால் துடைத்து உலர வைத்து, மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெயைத் தடவ, பாதங்கள் பொலிவோடும், சுத்தமாகவும், வறட்சியின்றியும் காட்சியளிக்கும்.

இந்த பெடிக்யூரை இரவில் படுக்கும் முன் செய்து, மாய்ஸ்சுரைசர் தடவிய பின் கால்களுக்கு காட்டன் சாக்ஸ் அணிந்து கொண்டால், பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பு விரைவில் மறைவதைக் காணலாம். இதை வாரம் ஒருமுறை செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

Leave a Reply