shadow

24-1424763354-peas-mushroom-masala

தேவையான பொருட்கள்:

காளான் – 1 கப்

பச்சை பட்டாணி – 1/4 கப் (வேக வைத்தது)

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்

முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் தக்காளியை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். முந்திரியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முந்திரியை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து 3 நிமிடம் பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும். பின் அதில் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி, பின் முந்திரி பேஸ்ட் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, கிரேவியை நன்கு கொதிக்க விட வேண்டும். அதற்குள் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து அதில் காளானை போட்டு, காளான் தண்ணீரை வெளியேற்றும் வரை நன்கு சுருங்க வதக்கி இறக்கி, கொதிக்கும் கிரேவியில் சேர்த்து, அத்துடன் பட்டாணியையும் சேர்த்து, 8-10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், பட்டாணி காளான் மசாலா ரெடி!!!

Leave a Reply