shadow

முன்னாள் மத்திய அமைச்சர் மகன் கார்த்திக் சிதம்பரம் அதிரடி கைது

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அன்னிய முதலீடு செய்வதற்கு கார்த்தி சிதம்பரம் உடந்தையக இருந்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் கடந்த சில மாதங்களாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்லின் மகன் கார்த்திக் சிதம்பரம் அவர்களிடம் விசாரணை செய்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்திக் சிதம்பரம் டெல்லி அழைத்து செல்லப்படவுள்ளதாகவும், இன்று மாலை அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வெளிநாட்டில் உள்ள ப.சிதம்பரம், இந்த கைது செய்தி அறிந்து உடனடியாக நாடு திரும்பி கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே கடந்த 16-ஆம் தேதி கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரன் ராமன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே

Leave a Reply