தமிழக பேருந்துகளில் புதிய வசதி

அரசு பேருந்துகளில் டிக்கெட் எடுக்க, ரொக்கமில்லா பரிவர்த்தனை நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் Paytm ஆப் மூலம் கட்டணம் செலுத்தும் வழிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பேருந்துகளிலும் ஒட்டப்பட்டிருக்கும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து பேருந்து டிக்கெட்டுக்களுக்கான கட்டணம் செலுத்தலாம் என போக்குவரத்து கழகம் அறிவிப்பு செய்துள்ளது.

இதன் மூலம் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவது, சில்லரை வாங்குவது போன்றவற்றில் ஈடுபட வேண்டியதில்லை என்றும், இதனால் கொரோனாவிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply