ராஜ்கோட் : குஜராத் மாநிலத்தில் பிறந்து பத்து நாட்களே ஆன பெண்குழந்தைக்கு பான்கார்டு வாங்கி பெற்றோர் சாதனை படைத்துள்ளனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் அபூர்வ மோடி. இவருக்கு கடந்த மாதம் 21 ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அகனா மோடி என்று பெயர் சூட்டினார். தனது குழந்தை வைத்து சாதனை படைக்க நினைத்த அவர், பிறந்த பத்தே நாட்களில் பான்கார்டு வாங்கினார்.
நாட்டில் பிறந்து குறைந்த நாட்களில் பான்கார்டு பெற்ற குழந்தை இதுதான். இது எனது அகனாவுக்கு நான் கொடுக்கும் பரிசு எனக்கூறிய அவர், இதற்கு பிறப்பு சான்றிதழ் உடனே கிடைத்தது தான் காரணம் என்றார். மேற்குவங்கத்தை சேர்ந்த பிஸ்பாமோடக் என்ற குழந்தை 22 நாட்களில் பான்கார்டு வாங்கிய சாதனை இதன் மூலம் முறியடிக்கபட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.