விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தின் பாகம் கருங்கடலில் கண்டுபிடிப்பு
ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிரியாவை மீட்க அவ்வப்போது ரஷ்யா தனது விமானங்களை அனுப்பி சிரியாவுக்கு உதவி வருகிறது.
இதனால் ரஷ்யாவின் மீது கடும்கோபம் கொண்ட ஐ.எஸ். தீவிரவாதிகள், ரஷ்யாவின் பயணிகள் விமானம் ஒன்றை சமீபத்தில் தகர்த்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த 91 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமானத்தை தேடும் பணியை ரஷ்யா முடுக்கிவிட்டிருந்த நிலையில் நேற்று இந்த விமானத்தின் முக்கிய பாகங்கள் கருங்கடலில் கண்டெடுக்கப்பட்டன. ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை அமைப்பு சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Leave a Reply
You must be logged in to post a comment.