சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 62 வது தேசிய விருதில் பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்காததை குறிப்பிட்டு தனது ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இயக்குனர் ஆர்.பார்த்திபன் திறமையுள்ள அனைவருக்கும் விருதுகள் கிடைப்பதில்லை என்று கூறியுள்ளார்.
பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “”‘The wolf of wall street’ படத்தில் லியானார்டோ டி காப்ரியோ-வுக்கு ஆஸ்கார் கிடைக்குமென நாடே காத்திருக்க, டி காப்ரியோ 10 வருடங்களாக அதற்காக வித்தியாசமான வேடங்களில் பின்னி/மின்னி ஆவலோடு காத்திருக்கிறார்.
திறமையுள்ள அனைவருக்கும் விருது கிடைப்பதில்லை, ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது விருது.
எனக்கும் ‘மேல்விலாசம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய படங்களில் சிறந்த நடிப்புக்கும், ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கு சிறந்த இயக்குநர், திரைக்கதை இப்படி சில விருதுகள் கிடைத்திருக்கலாமென பாராட்டி மக்கள் ‘பேசிய விருது’ தேசிய விருதுக்கு ஒப்பானது.
இருப்பினும் தொடரும் உங்கள் ஆதரவோடு தொடர்கிறேன் என் வித்தியாச முயற்சிகளை. நன்றி” என்று பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.