பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய வெற்றிப்படங்களை அடுத்து தனுஷ் -வெற்றிமாறன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னை அருகேயுள்ள ஈசிஆர் சாலையில் ஆரம்பமானது.
இந்த படத்தை தனுஷ் தனது சொந்த பேனரில் தயாரிக்கின்றார். ஆடுகளம் படத்தில் தேசியவிருது வாங்கிக்கொடுத்த இயக்குனர் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவரே இந்த படத்தை தயாரிக்கின்றார்.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா நடிக்க இருக்கிறார். சிம்புவுடன் ஏற்பட்ட பிரிவிற்கு பிறகு ஹன்சிகா ஒப்பந்தமாகும் முதல் படம் இது. மேலும் இந்த படத்தில் முதல்முறையாக பார்த்திபன் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். மேலும் அவர் ஹன்சிகாவுக்கு தந்தையாகவும் நடிக்கிறார்.
தன்னைவிட மிகவும் வயது குறைந்த இளைய நடிகருக்கு வில்லனாக நடிப்பது குறித்து பார்த்திபன் கூறும்போது, தனுஷுக்கு வில்லனாக நடிப்பதில் எனக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் ஹன்சிகாவுக்கு தந்தையாக நடிப்பதால் தனுஷுக்குத்தான் என்னால் பிரச்சனை வரும் என நினைக்கிறேன் என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.