2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீண்டும் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டால், அவரை தோற்கடிக்க அதிமுக சார்பில் பரிதி இளம்வழுதி போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்பெக்ட்ரம் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போட்டியிடமாட்டார் என முதலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட திமுக தலைமையிடம் விருப்ப மனு கொடுத்துள்ளார்.

பொதுத்தொகுதியாக இருந்த நீலகிரி தற்போது தனித்தொகுதியாக இருப்பதால் ஆ.ராசாவுக்கு எதிராக, சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்துள்ள பரிதி இளம்வழுதி களம் இறக்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் ஆ.ராசாவை தோற்கடிக்க இம்முறை ஆம் ஆத்மி கட்சியும் தங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்தும் என ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply