தேமுதிக கட்சியில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், அதிமுகவில் சேரப்போவதாகவும் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவருகிறது.

விஜயகாந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிக கட்சியில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த அவருக்கு அதிமுக தலைமை தூது விட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகிறது. பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் சேரப்போவதாகவும், அவருக்கு மாநிலங்களைவை தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் அதிமுகவில் கூறப்பட்டு வருகிறது.

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடக்கவுள்ள ஒரு விழாவில் முதல்வர் ஜெயலலிதா நேரடியாக பண்ருட்டியிடம் இந்த விருதை வழங்க இருக்கிறார். எனவே அதிமுகவுடன் பண்ருட்டியார் நெருங்கி வருவதாக தமிழக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply