பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பாம்பன் பாலத்திலும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை டிசம்பர் 6 – பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தீவிரவாத தாக்குதல் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாம்பன் பாலம் மற்றும் ராமேஸ்வரம் ராமநாமநாதசுவாமி கோயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து வருவது வழக்கம். பாபர் மசூதி இடிப்பு தினத்தையோட்டி கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.