பழநி மலைக்கோயில் உண்டியல் வசூல் 16 நாட்களில் ரூ.ஒரு கோடியே 7 லட்சத்து 75 ஆயிரம் கிடைத்துள்ளது பழநி மலைக் கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 719 கிராமும், வெள்ளி 10 ஆயிரத்து 100 கிராமும், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள் ளிட்ட வெளி நாடுகளின் கரன்சி 365, ரொக்கம் ரூ. ஒரு கோடியே 07 லட்சத்து 75 ஆயிரத்து 965 கிடைத்துள்ளது. தங்கத்திலான வேல், தொட்டில், செயின், வளையல், மோதிரம், நாணயம், திருமாங்கல்யம் மற்றும் வெள்ளியிலான முருகன் சிலைகள், ஆள் உருவம், வேல், பாதம், கொலுசு மற்றும் நவதானி யங்கள் போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இன்று உப கோயில்களின் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.