பழநி: பழநி, பெரியநாயகியம்மன் கோயிலில், திருஞானசம்பந்தருக்கு பாலுட்டும் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயில் முத்துகுமாரசுவாமி மண்டபத்தில் காலை ரிஷபவாகனத்தில் சிவன் பார்வதியும், திருஞானசம்பந்தர் உற்சவ மூர்த்திகள் கோயிலை வலம் வந்தனர். அதன்பின் சிவன், பார்வதி, திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் தீபாராதனை நடந்தது. அம்பாள் இடமிருந்து பொற்கிண்ணத்தில் ஞானப்பால் பெறப்பட்டு திருஞானசம்பந்தருக்கு ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கும் ஞானப்பால் பிரசாதமாக வழங்கப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.