shadow

பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு கல்லால் அடித்து கொலை செய்யும் தண்டனை: பாகிஸ்தான் பஞ்சாயத்து தீர்ப்பு

பாகிஸ்தானில் 19 வயது இளம்பெண் ஒருவரை அவரது உறவினர் ஒருவர் துப்பாக்கி முனையில் பயமுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்தவுடன் அந்த கிராமத்தின பஞ்சாயத்து செய்ய கூடினர். அந்த இளம்பெண் தான் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கதறியபடி கூறியும் அதை நம்பாத பஞ்சாயத்தார், அந்த உறவினருடன் அந்த பெண் கள்ளத்தொடர்பு கொண்டிருந்தார் என்று முடிவு செய்து அந்த பெண்ணுக்கு கல்லால் அடித்து கொலை செய்யும் தண்டனையை வழங்கினர்.

இதனால் அந்த கிராமத்தில் இருந்து தப்பித்து சென்ற அந்த பெண் அருகில் இருந்த போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணின் புகாரை ஏற்றுக்கொண்ட போலிசார், பஞ்சாயத்து தீர்ப்பு கூறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பெண்ணை பாதுகாப்புடன் தங்கள் பொறுப்பில் தங்க வைத்துள்ளனர்.

Leave a Reply